தமிழகத்தில் முக்கிய திட்டங்களை அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி.!
தமிழகத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல் பிரிவு ஆகியவற்றை பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இதன்மூலமாக சமூக பொருளாதார பயன்கள் அதிகரித்து, தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட முடியும் என்றும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதுதவிர, நாகையில் அமையவிருக்கும் காவிரிப்படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாக்களில் தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362