×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலிரவு அறைக்குள் மூச்சுவாங்க இறந்த இளம்ஜோடி.. உல்லாசத்தில் கைலாசம் போன பரிதாபம்..!

முதலிரவு அறைக்குள் மூச்சுவாங்க இறந்த இளம்ஜோடி.. உல்லாசத்தில் கைலாசம் போன பரிதாபம்..!

Advertisement

ஆசையாக வாழ்க்கையை தொடங்க நினைத்த தம்பதிக்கு முதலிரவு நேரத்தில் ஏற்பட்ட சோகத்தால் மரணம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோதியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ் (வயது 22). இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த புஷ்பா யாதவ் என்ற 20 வயது பெண்மணிக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து தம்பதிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த நிலையில், நேற்று இரவு தம்பதிகள் இருவரும் முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் தம்பதிகள் வெளியே வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர். 

அப்போது இருவரும் மயங்கிய நிலையில் கிடக்கவே, அவர்களை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணைக்கு பின்னரே இறப்பின் உண்மை என்பது தெரியவரும் என்றும் கூறுகின்றனர். தம்பதிகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனரா? அல்லது பாலியல் இன்பத்திற்கான மாத்திரைகள் சாப்பிட்டது ஏதேனும் பக்க விளைவு ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#first night #UttarPradesh #உத்திர பிரதேசம் #New couple #முதலிரவு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story