அடக்கடவுளே! நீட் தேர்வில் 99.99% பெற்ற மாணவன்! கல்லூரியில் சேரும் முதல் நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! படுச்ச படிப்பு பலன் இல்லாம போச்சே.....
மகாராஷ்டிராவில் 99.99% மதிப்பெண் பெற்று NEET தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வி சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் மருத்துவக் கல்வி கனவுகள் பல மாணவர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதிக்கின்றன. பெற்றோர் எதிர்பார்ப்பு மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக, மாணவர்கள் மன அழுத்தத்தில் சிக்கி, துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்
மகாராஷ்டிரா மாநில சந்திரபூரில், 19 வயதான அனுராக் அணில் போர்கர் என்ற மாணவர், கல்லூரியில் சேர வேண்டிய நாளில் உயிரை மாய்த்துக் கொண்டார். 2025 ஆம் ஆண்டு NEET UG தேர்வில் 99.99% மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற அவர், 1475வது ரேங்க் பெற்று உத்தரபிரதேச மாநில கோரக்பூரில் உள்ள அரசு கல்லூரியில் MBBS படிப்பதற்கான சீட்டையும் பெற்றிருந்தார்.
மருத்துவராக விருப்பமில்லை
அனுராக் தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், "தனக்கு மருத்துவராக விருப்பமில்லை" என்று குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பே, வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் நடந்து சென்ற தம்பதிகள்! 12 வருட மனவேதனை தாங்க முடியாமல் நொடியில் செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்...
காரணம் மற்றும் சந்தேகங்கள்
அனுராக், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பியதாகவும், ஆனால் குடும்பத்தினர் இந்தியாவில் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவரது மன அழுத்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு மற்றும் உயிரிழப்புகள்
2017 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியது. அதன்பின் பல்வேறு மாணவர்கள் இதே போன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வால் மாணவ செல்வங்கள் உயிரிழப்பது எப்போது நிறுத்தப்படும் என்பது இன்றும் பெரிய கேள்வியாக உள்ளது.
இந்தச் சம்பவம், மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்த சிக்கல்களை மீண்டும் வெளிச்சமிட்டுள்ளது. கல்வியிலும், வாழ்க்கையிலும் சமநிலையை பேணுவதன் அவசியத்தை சமூகமே உணர வேண்டிய தருணமாக இது மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஷாக் நியூஸ்! சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் உயிரிழப்பு! பெரும் சோகம்...