×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான 6 மாதத்தில் நடக்க கூடாதது நடந்துருச்சே.... நள்ளிரவு 3 மணிக்கு பிறகு நடந்தது என்ன? இரத்த கரையுடன் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்ட புதுப்பெண்.! பகீர் பின்னணி..!!!

கணவரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூரி சென்ற 27 வயது ஐடி பெண் ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழந்தார். உடற்கூறு அறிக்கையை எதிர்நோக்கி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 27 வயதான ஐடி ஊழியர் ராதா காயத்ரி, உத்தரகாண்ட் மாநிலம் மசூரியில் உள்ள ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் நடந்துள்ள இந்த நிகழ்வு, குடும்பத்தினரையும் ஐடி துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட பயணம் சோகத்தில் முடிந்தது

டெல்லியில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ராதா காயத்ரி, புனேயில் பணியாற்றும் தனது கணவர் சௌம்யா ஸ்ரீசரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மசூரி அருகே தனோல்டி சாலையில் அமைந்துள்ள கியானா ஹோம்ஸ்டேவில் தங்கியிருந்தார். தகவலின்படி, ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு 3 மணி வரை இருவரும் அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் மறுநாள் காலை, ராதா காயத்ரி அறைக்குள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரது மூக்கில் ரத்தக்கசிவு இருந்ததாகவும், உடல் ஆடையின்றி இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மர்ம மரணம் குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: வேலைக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு தனியார் விடுதியில் காதலனுடன் இருந்த 18 வயது இளம்பெண்! மதிய உணவுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்.... திருச்சியில் அரங்கேறிய பயங்கரம்..!!!

தடயவியல் ஆய்வு தீவிரம்

தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அறையில் இருந்த இரத்தக் கறைகள் படிந்த படுக்கை விரிப்புகள் மற்றும் மது பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டன.

உடற்கூறு பரிசோதனையில் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை அறிய மருத்துவர்கள் உடற்பாக மாதிரிகளை பாதுகாத்து வைத்து விரிவான பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராதா காயத்ரியின் விசரல் அறிக்கை வெளியாகிய பிறகே கூடுதல் தகவல்கள் தெளிவாகும் என கூறப்படுகிறது.

குடும்பத்தின் புகாரால் புதிய கோணம்

மகளின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக ராதா காயத்ரியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இயற்கை மரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திருமணமாகி சில மாதங்களிலேயே இளம் பெண் உயிரிழந்துள்ளதால் இந்த வழக்கு சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. உடற்கூறு மற்றும் தடயவியல் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: சுற்றுலா சென்ற புதுமண தம்பதிகள்! நள்ளிரவில் அந்த ஹோம்ஸ்டே அறையில் நடந்தது என்ன? விடிந்ததும் நிர்வாணக் கோலத்தில் சடலமாக கிடந்த மனைவி! கணவனின் பகீர் வாக்குமூலம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mussoorie Death #ராதா காயத்ரி #IT employee #மர்ம மரணம் #Uttarakhand police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story