கேரளாவில் அதிர்ச்சி: வேகமாக பரவும் 'MUMPS' நோய்.! ஒரே நாளில் 190 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு.!
கேரளாவில் அதிர்ச்சி: வேகமாக பரவும் 'MUMPS' நோய்.! ஒரே நாளில் 190 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு.!
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 190 பேருக்கு மம்ப்ஸ் என்றழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளாவில் 2,505 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 11,467 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள சுகாதார துறையின் தரவுகள் தெரிவிக்கிறது.
இந்த நோய் தொற்று கேரளாவில் வேகமாக பரவி வருவதை உறுதி செய்துள்ள மத்திய சுகாதாரத்துறை இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.