டூ-வீலரை ஒன் வீலராக்கி ஸ்டண்ட் செய்த இளைஞர்.. என்ஜாய் செய்த பெண் தோழி; இறுதியில் வந்ததோ ஆப்பு.!
டூ-வீலரை ஒன் வீலராக்கி ஸ்டண்ட் செய்த இளைஞர்.. என்ஜாய் செய்த பெண் தோழி; இறுதியில் வந்ததோ ஆப்பு.!
பைக்கில் பெண்களிடம் கெத்தாக ஸ்டண்ட் செய்தவர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அன்டாப் ஹில் பகுதியை சேர்ந்தவர் பயாஷ் அமீத் அஜிமுல்லா கட்ரி (வயது 24). குற்றப்பின்னணி கொண்ட பயாஷ் மீது அங்குள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பயாஷ் தனது தோழிகள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தார்.
அப்போது, 2 தோழிகளில் ஒருவர் முன்புறம் - பின்புறம் என அமரவைத்து இருக்க கட்டியணைத்துக்கொள்ள வைத்த பயாஷ், ஒற்றை சக்கரத்தில் இரண்டு சக்கர வாகனத்தை இயக்கி சாகசம் செய்தார்.
இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பயாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.