தினமும் படுக்கைக்கு வருமாறு அழைத்த இளம்பெண்! மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்!
Mumbai girl tortured a man for relationship
மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்த ஆண் நபர் ஒருவரை தினமும் ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அந்த நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் மித்காரி(38). மும்பை பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மித்காரியுடன் வேலை பார்த்துவந்த இளம்பெண் ஒருவர் மித்திகரிக்கு
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் என் ஆசைக்கு இணங்க மறுத்தால், என்னை கற்பழிக்க முயன்றாய் என உன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மித்காரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மித்காரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் மித்காரிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அந்த பெண் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.