இளைஞர் கன்னத்தில் பளார்விட்டு, எட்டி உதைத்து... போக்குவரத்து காவலரின் அதிர்ச்சி செயல்.!
இளைஞர் கன்னத்தில் பளார்விட்டு, எட்டி உதைத்து... போக்குவரத்து காவலரின் அதிர்ச்சி செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த காவலர் ஒருவர், அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டியை நடுரோட்டில் கடுமையாக தாக்கும் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் எப்போது? எங்கு நடந்தது என்ற விபரங்கள் சேகரிக்கப்படும் நிலையில், காவலரின் செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோ வைராலனதை தொடர்ந்து, பலரும் மும்பை காவல்துறையின் எக்ஸ் பக்கத்தை இணைத்து விடியோவை பகிர்ந்தார். இதனையடுத்து, அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.