தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புலியிடம் இருந்து ஓனரை உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்.. ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்துக்கு இவ்ளோ பவரா.?! 

புலியிடம் இருந்து ஓனரை உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்.. ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்துக்கு இவ்ளோ பவரா.?! 

mp dog bendho saved his owner life from tiger Advertisement

மத்திய பிரதேச மாநிலத்தில் குமாரியா மாவட்டத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் விவசாயம் செய்து வருபவர் சிவம். இவர் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ஒரு நாயை வளர்த்து வருகின்றார். அந்த நாய்க்கு பெந்தோ என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவமுடன் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து பெந்தோ செல்வது வழக்கம். 

இந்த நிலையில் சம்பவ தினத்தில் அதிகாலை 4 மணி அளவில் சிவம் மற்றும் பெந்தோ இருவரும் வயரை காவல் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு புலி சிவத்தை நோக்கி வந்தது. அந்த நேரத்தில் சற்றும் தாமதிக்காத பெந்தோ தனது உரிமையாளரை காக்க புலியின் மீது ஆவேசமாக தாவியது. 

நாயின் ஆவேசத்தை பார்த்த புலி பயந்து போய் நாயுடன் சண்டை போட்டது. இரண்டும் கொடூரமாக தாக்கிக் கொண்ட நிலையில் கவ்விக்கொண்டு சண்டை போட்டது. அப்போது நாய் தனது பிடியை நழுவவிடும் வரை தொடர்ந்து, புலியும் சண்டையிட்டது. மிக மோசமாக நாய் பாதிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்.!

அதே நேரத்தில் மன உறுதியுடன் பெந்தோ எதிர் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தது. அப்போது புலி குழப்பமடைந்து சோர்வடைந்து அங்கிருந்து சென்றுவிட்டது. உடனடியாக பெந்தோவை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு சிவம் கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பெந்தோ உயிரை விட்டது.

இதையும் படிங்க: பூனைக்காக உயிரையே கொடுத்த பெண்மணி.! 3 நாட்கள் பிணத்துடன் இருந்த சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bendho #dog #tiger
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story