×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மனைவி, கணவனை பழிவாங்க 4 வயது சிறுமியை பயன்படுத்திய கொடூர சம்பவம்!.

கள்ளக்காதலனுடன் வாழ்ந்த மனைவி, கணவனை பழிவாங்க 4 வயது சிறுமியை பயன்படுத்திய கொடூர சம்பவம்!.

Advertisement


ஹைதராபாத் மாநிலத்தில் 25 வயதான சரிதா என்பவர் கணவருடன் சண்டை போட்டு 15 நாட்களுக்கு முன்னதாகா தன்னுடைய கணவரை பிரிந்து காதலன் வெங்கட் ரெட்டியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சரிதா தன்னுடைய கணவருடன் நடந்த சண்டைக்கு கணவனை பழிவாங்க தான் பெற்ற 4 வயது மகளை பயன்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த கொண்ட பக்கத்து வீட்டார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்  சரிதா மற்றும் அவருடைய காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் உடல்முழுவதும் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், சிறுமியிடம் வீடியோ மூலம் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுமி திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்தார். சிறுமி கூறுகையில் முதலில் புது அப்பா தான் என்னை அடித்தார். பின்பு கரண்டியை அம்மா சூடு பண்ணி கொடுத்ததும், அதை வைத்து என்னுடைய பின் பக்கத்தில் சூடு போட்டார் என கூறியுள்ளார். இதனையடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mom #tortured #illegal affairs
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story