×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடச்சீ... கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... நேரில் பார்த்த 9 வயது சிறுமிக்கு தாய் செய்த கொடூரம்...

அடச்சீ... கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்... நேரில் பார்த்த 9 வயது சிறுமிக்கு தாய் செய்த கொடூரம்...

Advertisement

பெங்களூரு மாநிலம் கலபுரகி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் தாய் அதே பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வார்டன் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் அதே விடுதியில் அரசு வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவருடன் சிறுமியின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் சிறுமியின் தாய் அந்த நபருடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனை பற்றி தெரிந்து 9 வயது மகளை மிரட்டியதுடன் வெந்நீர் ஊற்றி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் அந்த சிறுமி பிரம்மபுரா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரில் தனது தாய் வேறு நபருடன் உல்லாசமாக இருந்து வருவதாகவும் இதனை பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன் தினமும் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் புகார் கொடுத்துள்ளார். அதனையடுத்து போலீசார் சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mother #torture #9 years old daughter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story