×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் உச்சம்! கணவரை தீர்த்துக்கட்ட பக்காவா பிளான் போட்டு, மனைவி செய்த காரியம்! அதிர்ந்துபோன போலிசார்!!

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் அமீர். இவ

Advertisement

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கெதிப்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் அமீர். இவரது மனைவி தபஸ். அமீருக்கு சில காலங்களுக்கு முன் மராட்டிய மாநிலத்திற்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த  தபஸ்க்கு, இம்ரான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. மேலும் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அமீர் பணிபுரிந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அதனால் அவர் மனைவியை பார்க்க ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு மனைவிக்கு இர்பானுடன் ஏற்பட்டுள்ள பழக்கம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தபஸ் தனக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொல்ல கூகுளில் ஐடியாக்கள் தேடியுள்ளார். பின் அவர் தனது காதலனை வரவைத்து கணவர் அமீருக்கு ஆஸ்துமா மருந்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

பின் இருவரும் அமீரின் கை மற்றும் கால்களைக் கட்டி, அவர் இறக்கும் வரை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து கணவர் திடீரென இறந்து விட்டதாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். இந்நிலையில் அமீரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் அங்கு விரைந்து அவர்கள் தபஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர் நடந்த உண்மையை ஒப்புக் கொண்டநிலையில் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#killed #illegal affairs
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story