×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடு ரோடுன்னுகூட பார்க்கல!! மருமகனை ரோட்டில் வைத்து செருப்பால் அடித்த மாமியார்!! வைரல் வீடியோ..

தனது மருமகனை மாமியார் ஒருவர் நடுரோட்டில் வைத்தது செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை

Advertisement

தனது மருமகனை மாமியார் ஒருவர் நடுரோட்டில் வைத்தது செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சந்த் பாபு. இவருக்கும் ஹரியவானில் உள்ள பீலமஹுவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோ என்ற பெண்ணிற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சந்த் பாபு தனது மனைவியை அடித்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஒருகட்டத்தில் அவரது மனைவி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது கணவன் மீது காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சந்த் பாபு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது தனது மாமியாரை சந்தித்துள்ளார். தனது மருமகனை நேரில் சந்தித்த அவரது மாமியார், தனது மகளையாடா அடித்து கொடுமை படுத்தின என கூறிக்கொண்டே தனது காலில் இருந்த செருப்பை எடுத்து தனது மருமகனை நடுரோட்டில் தாக்கியுள்ளார்.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவரும்நிலையில், தனது மாமியார் தன்னை செருப்பால் அடித்தது தொடர்பாக சந்த் பாபு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story