மதுபோதையில் மதி இழந்த மருமகன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காததால் மாமியார் செய்த வெறிச்செயல்.!
மதுபோதையில் மதி இழந்த மருமகன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காததால் மாமியார் செய்த வெறிச்செயல்.!
மதுபோதையில் மதி இழந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமை செய்த மருமகனை, மாமியார் கொலை செய்ய முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாவட்டம், ஆந்திரஹள்ளியில் வசித்து வருபவர் கேஷவ் (வயது 44). இவரது மனைவி சகுந்தலா (வயது 38). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அத்துடன் 60 வயதான கேசவனின் மாமியாரும் இவர்களுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கேசவனுக்கு மது பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி மற்றும் மாமியாரை அடித்துக் கொடுமை செய்துள்ளார். இவை அனைத்தையும் பொறுத்து கொண்ட கேசவனின் மாமியார், தனது பேரக்குழந்தைகளையம் விட்டு வைக்காமல், அவதூறாக பேசி கொடுமை செய்ததை பொறுத்துக்கொள்ள இயலாமல் மருமகனிடம் சண்டை போட்டுள்ளார்.
அப்போது வலி பொறுக்க இயலாமல் கேசவன், 'தன்னை விட்டுவிடுமாறு மாமியாரிடம் கெஞ்சி இருக்கிறார்.' இருந்தபோதிலும் மாமியார் அடிப்பதை நிறுத்தாமல், அடித்த இடத்திலேயே மீண்டும் அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய கேசவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362