×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபோதையில் மதி இழந்த மருமகன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காததால் மாமியார் செய்த வெறிச்செயல்.!

மதுபோதையில் மதி இழந்த மருமகன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காததால் மாமியார் செய்த வெறிச்செயல்.!

Advertisement

மதுபோதையில் மதி இழந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமை செய்த மருமகனை, மாமியார் கொலை செய்ய முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாவட்டம், ஆந்திரஹள்ளியில் வசித்து வருபவர் கேஷவ் (வயது 44). இவரது மனைவி சகுந்தலா (வயது 38). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அத்துடன் 60 வயதான கேசவனின் மாமியாரும் இவர்களுடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கேசவனுக்கு மது பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு, தனது மனைவி மற்றும் மாமியாரை அடித்துக் கொடுமை செய்துள்ளார். இவை அனைத்தையும் பொறுத்து கொண்ட கேசவனின் மாமியார், தனது பேரக்குழந்தைகளையம் விட்டு வைக்காமல், அவதூறாக பேசி கொடுமை செய்ததை பொறுத்துக்கொள்ள இயலாமல் மருமகனிடம் சண்டை போட்டுள்ளார்.அப்போது தனது மருமகனிடம் 'ஏன் இவ்வாறு தினமும் குடித்து வந்து எனது மகளையும், என் பேரகுழந்தைகளையும் கொடுமைப்படுத்துகிறாய்?' என்று கேட்டுள்ளார். இதனால் ஆவேசமடைந்த மருமகன் மீண்டும் அவரை திட்டி அடிக்க முயற்சித்த நிலையில், கோபமுற்ற மாமியார் அருகிலிருந்த ஒரு தடியை எடுத்து மருமகனை பயங்கரமாக தாக்கியுள்ளார்.

அப்போது வலி பொறுக்க இயலாமல் கேசவன், 'தன்னை விட்டுவிடுமாறு மாமியாரிடம் கெஞ்சி இருக்கிறார்.' இருந்தபோதிலும் மாமியார் அடிப்பதை நிறுத்தாமல், அடித்த இடத்திலேயே மீண்டும் அடித்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய கேசவன் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #bangalore #mother in law #fight #andhirahalli
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story