×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல பேருடன் தாய்க்கு தொடர்பு.! கட்டாயப்படுத்தி மகளுக்கு செய்த கொடூரம்.! கண்ணீர் விட்டு கதறும் 17 வயது சிறுமி!!

mother forced daughter for illegal relationship

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா பகுதியில் வசித்து வந்தவர் ஆஷா ராணி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் ஆஷாவின் மகள், தனது தாய் மீது போலீசாரிடம்  அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர்,  என் தாய்க்கு பல நபருடன் தவறான உறவு வைத்திருந்தார். இதனால் எனது தந்தை மற்றும் தாய்க்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டு, கடந்த 3 வருடங்களுக்கு முன் தந்தை பிரிந்து சென்றுவிட்டார். 

இந்நிலையில் எனது அம்மாவிற்கு, ராம் லூபையா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி என்னையும் பல ஆண்களுடன் பழக வற்புறுத்தினார். இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அந்த நபரிடம் ரூபாய் 3 லட்சம் வாங்கிக்கொண்டு  என்னை அவருக்கு திருமணம் செய்துவைத்தார்.

அதனை தொடர்ந்து ராம் என்னை கொடுமைப்படுத்தி,  பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தினார். நான் கஷ்டப்பட்டு அவரிடமிருந்து தப்பித்து எனது அம்மா வீட்டிற்கு சென்றேன். அனால் அங்கு வந்த ராம் என்னை அடித்து மீண்டும் அவருடன் அழைத்து சென்று விட்டார். அதற்கு எனது தாயும் உதவியாக இருந்தார் என கூறியுள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து மீண்டும் ராம் வீட்டிலிருந்து தப்பித்த சிறுமி, தன் தந்தையின் நண்பரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார்.  பின்னர் அவரின் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய போலீசார், சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affairs #gaughter complaint
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story