×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகனை கவ்வி சென்ற சிறுத்தை... சிறிதும் தயங்காமல் தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.!

மகனை கவ்வி சென்ற சிறுத்தை... சிறிதும் தயங்காமல் தாய் செய்த நெகிழ்ச்சி செயல்.!

Advertisement

தனது 8 வயது மகனை காப்பாற்ற சிறுத்தையிடம் சண்டையிட்ட தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய பிரதேசம் பகுதியை சேர்ந்தவர் கிரண் பாய்கா. அவரின் 8 வயது மகனான ராகுலை சிறுத்தை ஒன்று இறைக்காக கவ்வி கொண்டு ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சிறிதும் தயங்காமல் சிறுத்தையை தூரத்தி சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தி சென்ற கிரண் சிறுத்தையை நெருங்கியதும் அருகில் கிடந்த குத்தியை எடுத்து சிறுத்தையை தாக்க முயன்றுள்ளார்.உடனே சிறுத்தை ராகுலை விட்டுவிட்டு கிரண் மீது பாய்ந்துள்ளது.அவரும் விடாமல் தொடர்ந்து சிறுத்தையிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் கிரணின் அலறல் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்கவே அனைவரும் ஓடி வந்துள்ளனர்.உடனே சிறுத்தை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட கிரண் பாய்கா மற்றும் ராகுலை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leopard #Fights #Mothers love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story