×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீடியோ: தனது மூச்சு காற்றை கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய நபர்!! வைரலாகும் வீடியோ இதோ....

தனது மூச்சு காற்றை கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய கார் டிரைவர்! வைரலாகும் வீடியோ காட்சி....

Advertisement

நாய் கடித்து மயங்கிய குரங்கு ஒன்றை கார் ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து உயிர் பிழைக்க வைத்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் ஓதியம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. ஓட்டுநராக வேலைபார்த்து வரும் இவர், கடந்த 9ஆம் தேதி குரங்கு ஒன்று தெரு நாய்களிடம் துரத்தி கடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழேவிழுந்துகிடப்தை பார்த்துள்ளார்.

இதைப்பார்த்த கார் ஓட்டுநர் பிரபு உடனே குரங்குக்கு தண்ணீர்கொடுத்துள்ளார். ஆனால் அந்த குரங்கு மயக்கத்தில் இருந்த நிலையில் குரங்கு தண்ணீர் குடிக்கவில்லை. உடனடியாக அவர் குரங்கின் வாயோடு தன் வாயை வைத்து மூச்சுக்காற்று செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இதனை அடுத்து அந்த குரங்கு துள்ளி குதித்து எழுந்தது. பிறகு அந்த குரங்கை மீட்டு அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார் பிரபு. சாதாரண குரங்குதானே என்று பாராமல், குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை வழங்கி, குரங்கை காப்பாற்றிய ஓட்டுநர் பிரபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#monkey #car driver
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story