6 வயது மகனை கழிவறையில் வைத்து கர்ப்பிணி தாயார் செய்த செயல்.! அதிர்ச்சி சம்பவம்.!
கடவுளிடமிருந்து மகனை பலி கொடுக்குமாறு கட்டளை வந்ததால் பெற்ற மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் தாய்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பூளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுலைமான். டாக்சி டிரைவராக இருக்கும் சுலைமானுக்கு ஷாஹிதா என்ற இளம்பெண்ணுடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் ஷாகிதா தற்போது கர்பிணியாகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், ஷாகிதா அவரது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தினத்தன்று ஷாகிதாவின் கணவர் சுலைமான் குடியிருப்பில் இல்லை என கூறப்படுகிறது. சுலைமானின் குடும்பத்தினர் வழக்கம் போல வீட்டில் தூங்கினர். அப்போது அதிகாலையில், ஷாஹிதா தன்னுடைய மகன் ஆமிலை தூக்கத்தில் இருந்து எழுப்பி பின்னர் அவனை குளியலறைக்கு கொண்டு சென்று மகனை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அந்த சிறுவன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362