வெற்றி பெற்றதும் மோடி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? இதோ!
Modi removed word chowkidar from twitter

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. சுமார் 340 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த முறை வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஓரிரு தொகுதிகளை தவிர அனைத்திலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ள பாஜகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல மோடி அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு முதல் வெளியாக தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து Chowkidar (காவலாளி) என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். மோடியை தொடர்ந்து பாஜக தலைவர்கள் பலரும் அந்த வார்த்தையை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி வருகின்றனர்.