உபியில் பயங்கரம்... மைனர் சிறுமி பலாதக்காரம்.!! 75 வயது முதியவர் கைது.!!
உபியில் பயங்கரம்... மைனர் சிறுமி பலாதக்காரம்.!! 75 வயது முதியவர் கைது.!!
உத்திரப்பிரதேசம் அவுரையா மாவட்டத்தில் 75 வயது பிசம்பர் தயாள் என்ற முதியவர் தனது நண்பரின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததுள்ளது, இதில் அந்த முதியவர் தனது நண்பரின் மைனர் மகளை பிரசாதம் ஊட்டுவதாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனால் பயந்த சிறுமி தனக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே 5 மாதம் கழித்து கர்ப்பமாக இருப்பதை அறிந்து தனது தாயிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "பாப்பா ட்ரெஸ்ஸ கழட்டி அங்கிள் ஏதோ செய்றாரு..." 8 வயது சிறுமி பலாத்காரம்.!! 44 வயது நபர் கைது.!!
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர் காவல் துறையினர் வழிகாட்டுதலின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து பிசம்பர் தயாளை கைது செய்தது. இது தொடர்பாக பிதுனா வட்ட அதிகாரி புனித் மிஸ்ரா குற்றவாளிக்கு கடும் தண்டனையளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.