"நீயெல்லாம் ஒரு அம்மாவா..." மகளை ஆபாச படமெடுத்த தாய்.!! கள்ளக்காதலன் உடந்தை.!!
நீயெல்லாம் ஒரு அம்மாவா... மகளை ஆபாச படமெடுத்த தாய்.!! கள்ளக்காதலன் உடந்தை.!!

புனே நகரில் பெற்ற தாயே, மகள் குளிக்கும் வீடியோவை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் குளிக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்த தாய்
மகாராஷ்டிரம் மாநிலம் புனே நகரை சேர்ந்த 14 வயது சிறுமி குளிப்பதையும் உடை மாற்றுவதையும் வீடியோ பதிவு செய்த அவரது தாய் அதனை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்ததோடு சமூக வலைதளங்களிலும் பதிவு செய்திருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன் சிறுமி தனது தாயார் மீது காவல்துறையிடம் புகாரளித்தார்.
கள்ளக்காதல் பற்றி தெரிந்ததால் ஆத்திரம்
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 மாதங்களுக்குப் பிறகு சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் தாய்க்கு அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதில் இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்திருக்கிறது. இதனையறிந்த சிறுமி, தனது வீட்டு உரிமையாளரிடம் தாயின் கள்ள உறவு பற்றி கூறியிருக்கிறார். இதனால் தனது திருமணம் மீறிய உறவு குறித்து குடும்பத்தாரிடமும் மகள் தெரிவித்து விடுவாள் என்று பயந்த கள்ளக்காதல் ஜோடி அந்த சிறுமியை அவமானப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.
இதையும் படிங்க: "காதல் படுத்தும் பாடு..." 60 வயது முதியவர், இளம் பெண் தற்கொலை.!! காவல் துறை விசாரணை.!!
இதன்படி தனது மகள் குளிக்கும் போதும் உடைமாற்றும் போதும் அதனை ரகசியமாக வீடியோ பதிவு செய்திருக்கிறார் சிறுமியின் தாய். இதன் பிறகு தனது கள்ளக்காதலனின் உதவியுடன் அந்த வீடியோக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்துள்ளார் மேலும் அதனை சமூக ஊடகங்களிலும் பதிவேற்றி இருக்கிறார். இந்தக் கொடூரமான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவளது கள்ளக்காதலன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "ம்ம்மா... எரியுதுமா விட்டுடு..." எரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.!! தாய் தற்கொலை.!!