×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட பழமையான கல்லறை... எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை.!

மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட பழமையான கல்லறை... எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை.!

Advertisement

குருகிராமில் அமைந்துள்ள பழமையான கல்லறை ஒன்று மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் குருகிராம்பில் அமைந்துள்ள பழமையான கல்லறை இன்று அதிகாலை  மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கல்லறைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த கல்லறையை பராமரித்து வரும் கிஷ்டி ராம் என்ற நபர் 5 முதல் 6 சிறுவர்கள் இன்று அதிகாலை நேரத்தில் கல்லறைக்கு தீ வைத்ததை தான் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல் துறையினர் மர்ம நபர்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க வைத்திருக்கின்றனர் என்று தெரிவித்தனர். மேலும் அவர்கள் அனைவரும் விரைவிலேயே கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #gurugram #Crime #mazar set fire
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story