×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமான இளம் பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்த நான்கு இளைஞர்கள்! கைது செய்த போலீசார்!

Married women abused by four members through Facebook

Advertisement

ஆந்திர மாநிலம் அனந்தப்புரம் மாவட்டம் ராயதுர்கம் நகரை சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நிஷா அவர் வசித்துவரும் பகுதியில் உள்ள பால் கடை ஒன்றில் அடிக்கடி பால் வாங்க சென்றுள்ளார். அப்போது நிஷாவிற்கும், அந்த பால் கடையில் வேலை செய்யும் பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

நிஷாவுடன் இருக்கும் உறவு குறித்து பாபு அவரது நண்பர்களிடம் தெரிவிக்க அவர்கள் நான்கு பேரும் நிஷாவுடன் முகநூலில் நட்பு பாராட்டி தங்களது ஆசைக்கு இணங்க அழைத்துள்ளனர். நிஷா அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, நீ எங்களது ஆசைக்கு இணங்க மறுத்தால் பாபுவுடன் உனக்கு இருக்கும் உறவு குறித்து உங்கள் வீட்டில் தெரிவித்துவிடுவோம் என அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் இவர்களது தொல்லை அதிகமானதை அடுத்து வீட்டிலும் இதுகுறித்து தெரிவிக்கமுடியாத நிலையில் நிஷா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் நிஷாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்த அவரது கணவரிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார் நிஷா.

இதனை அடுத்து, பாபு, அவரது நண்பர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Crime news #illegal affairs
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story