×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியிடம் தனக்கு கொரோனா என கூறி காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவன்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

married man escaped with lover

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தனது மனைவிக்கு போன் செய்து, தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், இதனால் தான் உயிர் பிழைக்கமாட்டேன் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், மிஸ்ராவின் செல்போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை. இந்தநிலையில் மிஸ்ராவின் மனைவி தனது கணவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர். அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் செய்தது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மிஸ்ரா மத்திய பிரதேசத்திற்கு பயணம் சென்றது தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக மும்பை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர். அங்கு மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#married husband #escaped
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story