×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் ரயிலில் தனியாக இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை!! பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

man sexual torture in train

Advertisement


மும்பையில் தனியார் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். தினமும் இவர் தனது பணிக்கு இரயில் மூலம் சென்று வருவது வழக்கம். அப்போது பிளாட்பாரத்தில் நின்ற ஒரு ரெயிலில் அவர் ஏறினார். 

அவர் பெண்கள் பெட்டியில் உட்கார்ந்து இருந்தார். ஆனால் வேறு யாரும் அந்த பெட்டியில் இல்லை. அப்போது இரயில் புறப்படும் நேரத்தில் ஆண் நபர் ஒருவர் வேகமாக ஏறினார்.  அந்த பெட்டியில் ஏறிய அவரை கண்ட பெண், இந்த பெட்டி பெண்களுக்கான பெட்டி என்று கூறியுள்ளார். 

ஆனால் அதனை கேட்காமல் அவர் அருகே வந்து அமர்ந்துள்ளார் அந்த நபர். இதனால் அந்த பெண் வாசல் அருகே வந்து நின்றாா். அடுத்த ரெயில்நிலையத்தில் ரெயில் நின்றவுடன் இறங்க அவர் நினைத்தார். இந்தநிலையில் மின்சார ரெயில் மஸ்ஜித் ரோடு ரெயில்நிலையத்தில் நிற்காமல் பணிமனைக்கு செல்வதை பெண் தெரிந்து கொண்டார். இந்தநிலையில் பெட்டியில் இருந்த நபர் பெண்ணை பாலியல் தொல்லை செய்ய அவரை நெருங்கி வந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இரயிலில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்து உயிருக்கு துடித்த இவரை மீட்ட இரயில்வே காவல் துறையினர்., மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் ரயிலில் தொல்லை கொடுத்த அந்த நபரை சிசிடிவி காட்சிகள் பதிவை வைத்து போலீசார் தேடிவருகின்றனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train #sexual torture
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story