வருங்கால மருமகளை பலமுறை கற்பழித்த மாமனார்! அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
Man misbehave with young girl with fake reasons
இந்தோனிசியாவின் Wonomulyo பகுதியில் இருக்கும் West Sulawesi-ஐ சேர்ந்த 47 வயது தந்தை ஒருவர் தன் மகனுக்கு வருங்காலத்தில் மனைவியாகப் போகும் பெண்ணின் கற்பை சோத்தித்து பார்க்கிறேன் என்ற பெயரில் அவரை பல முறை கற்பழித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து 16 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை குடுத்தார். அதை விசாரித்த காவலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அதை பற்றி அந்த பெண் கூறுகையில், இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பல ஆண் நண்பர்கள் உள்ளனர், எனவே அவர்களுடன் ஏதேனும் பழக்கம் உண்டா, நான் கற்புடன் இருக்கிறேனா என கண்டறிய தனது வருங்கால கணவரின் தந்தை என பத்துக்கு மேற்பட்ட முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தன்னை பல முறை கற்பழித்தாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் மற்றும் சில வழக்குகளின் கீழ் அவரை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தந்தையின் செயலால் இந்த திருமணமும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.