வீடியோ: அட கடவுளே.. தேங்கி நின்ற மழைநீரில் நடந்தவர் மீது பாய்ந்த மின்சாரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..
தேங்கி நின்ற மழை நீரில் நடந்த சென்ற நபர் மீது மின்சாரம் தாக்கிய வீடியோ காட்சிகள் பார்ப்போர
தேங்கி நின்ற மழை நீரில் நடந்த சென்ற நபர் மீது மின்சாரம் தாக்கிய வீடியோ காட்சிகள் பார்ப்போரை பதறவைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் குளாவுத்தி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மழை நீர் தேங்கி நின்ற குறுகிய பாதையில் நடந்துசென்றபோது, நீரில் பாய்ந்த மின்சாரம் அந்த இளைஞரை தாக்கியது. இதில் அந்த இளைஞர் அதே இடத்தில் மயங்கிய நிலையில் நீரில் சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்த சிலர் மழைநீரில் சுய நினைவற்று கிடந்தவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்த இளைஞர் உடல் நலம் தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362