தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் பிணத்தின் கையை சமைத்து சாப்பிட கொடூரம்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

Man cook dead body hand in uthra pradesh

Man cook dead body hand in uthra pradesh Advertisement

பாதி வேகாமல் கிடந்த பிணத்தின் கையை நபர் ஒருவர் சமயல் செய்து சாப்பிட சம்பவம் உத்திர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வருபவர் 32 வயதாகும் நபர் சஞ்சய். இவர் மிகப்பெரிய குடிகாரர் என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். அளவுக்கு மீறி குடிப்பது, அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவது என வழக்கமாக வைத்துள்ளார் அந்த நபர்.

இந்நிலையில், பொருட்கள் வாங்குவதற்காக சஞ்சய்யின் மனைவி அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே அளவுக்கு மீறி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சஞ்சய் சமயலறைக்கு சென்று இரவு உணவை சமைத்துள்ளார்.

Mysteries

மார்க்கெட் சென்றுவிட்டு வீட்டுக்கு திருமபிய சஞ்சையின் மனைவியை, கணவன் ஆசையாக சமைத்து வைத்திருந்த அசைவ உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். உனவை சாப்பிட அடுத்த நொடியே வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அந்த உணவை குறித்து ஆய்வு செய்தபோதுதான் தெரிந்தது, அது சுடுகாட்டில் சரியாக வேகாத பிணத்தின் கை என்று.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவனை வீட்டின் உள்ளே வைத்து சாத்திவிட்டு அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டு நடந்த சம்பவம் பற்றி கூறி அழுதுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து சஞ்சய்யை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மது குடித்த அவர், அளவுக்கு அதிகமான போதையில் கங்கை கரைக்கு சென்று அங்கு எரிக்கப்பட்ட பிணங்களிலிருந்து வேகாத கை ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்து சமைத்ததாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysteries #Crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story