×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகள் கண்முன் தாய் கழுத்தை நெரித்துக்கொடுர கொலை.. கணவன் வெறிச்செயல்.. அலறிய பிஞ்சுகள்.!

நடத்தை சந்தேகத்தால் கணவர் மனைவியை கொலை செய்தார்.

Advertisement

மனைவியை கொலை செய்த கணவர் நேரடியாக காவல் நிலையம் சென்று சரணடைந்தார்.

தம்பதிகள்:

உத்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சல்மான் கான். இவரின் மனைவி ஹஷின் பானு. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாசிம் மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

நடந்தை சந்தேகம்:

இதனிடையே, தனது மனைவி ஹஷின் நடத்தையில் சல்மான் கான் சந்தேகப்பட்டு இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிலை வந்துள்ளது. சம்பவத்தன்று மனைவி, குழந்தைகளுடன் இவர்கள் காரில் வாசிம் மாவட்டம் கரஞ்சா பகுதிக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

வாக்குவாதம்:

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சல்மான் கான் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கி இருக்கிறார். குழந்தைகள் கண்முன்னே தாயை கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின் அங்குள்ள காவல் நிலையத்துக்கு நேரில் சென்று சரணடைந்துள்ளார்.

அதிர்ந்துபோன அதிகாரிகள்:

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டனர். மேலும், குழந்தைகளை பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: கணவன்-மனைவி தகராறை தீர்த்துவைக்காத நபர் குத்திக்கொலை.. ஆத்திரத்தில் அரங்கேறிய வெறிச்செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Mumbai #Affair Doubt #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story