×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஃபேர்வெல் நிகழ்ச்சியில் கொண்டாட்டமாய் பேசிய பெண்.! சற்று நேரத்தில் மரணம்.!

ஃபேர்வெல் நிகழ்ச்சியில் கொண்டாட்டமாய் பேசிய பெண்.! சற்று நேரத்தில் மரணம்.!

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்லூரி ஒன்றில் சமீபத்தில் ஃபேர்வெல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வர்ஷா என்ற 20 வயது பெண் படித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் நெகிழ்ச்சியுடன் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். 

இதை அருகில் இருந்தவர்கள் பார்த்துவிட்டு பதறிப் போய் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே வர்ஷா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது, திடீர் மாரடைப்பு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாம்.

இது பற்றிய போலீஸ் விசாரணையில் வர்ஷாவின் 8 வயதில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமாக தான் இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: விழுப்புரம்: கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை.. போதை இளைஞர்கள் அதிர்ச்சி செயல்.!

ஆனால், சம்பவ தினத்தில் மகிழ்ச்சியோடு நண்பர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாமதமான ரயில்.. டிக்கெட் தொகையை திருப்பி பெற இதை செய்தால் போதும்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mahatashtra #college girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story