×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்.. தெய்வமாய் வந்து காப்பாற்றிய அதிகாரி.. பதைபதைப்பு வீடியோ.!

இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்.. தெய்வமாய் வந்து காப்பாற்றிய அதிகாரி.. பதைபதைப்பு வீடியோ.!

Advertisement

இரயில் வரும் நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவனை இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி நொடிப்பொழுதில் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், விட்டல்வாடி இரயில் நிலையத்தில், 16 வயது சிறுவன் தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, சிறுவன் நின்ற நடைமேடை வழியே அதிவிரைவு இரயில் செல்லவிருந்த நிலையில், இரயில் தன்னருகே வரும்போது யாரும் எதிர்பாராத வேலையில் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறான். 

நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, சிறுவனை நடைமேடையில் இருந்து தள்ளிவருமாறு கூறிய நிலையில், தற்கொலை எண்ணத்தில் இருந்தவன் தண்டவாளத்தில் குதித்து இருக்கிறான். இதனைக்கண்டு பதறிப்போன அதிகாரி, சுதாரிப்புடன் செயல்பட்டு சிறுவனை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு உயிரை காப்பாற்றினார். 

இரயில் தண்டவாளத்தில் இருந்து சிறுவனை காப்பாற்றிய அடுத்த நொடியே இரயில் சிறுவன் நின்றுகொண்டு இருந்த இடத்தை கடந்து சென்றது. இதனால் நொடிப்பொழுதில் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிறுவனின் உயிரை காப்பாற்றிய அதிகரிக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Thane Vitthalwadi #Thane #railway station #suicide attempt #Life Saved
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story