×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20 வயது பெண் மீது ஒருதலைக்காதல்.. 38 வயது நபர் விபரீத செயல்.. ஆசிட் வீசி பயங்கரம்.!

20 வயது பெண் மீது ஒருதலைக்காதல்.. 38 வயது நபர் விபரீத செயல்.. ஆசிட் வீசி பயங்கரம்.!

Advertisement

ஒருதலைக்காதலுக்கு 20 வயது பெண்மணி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மீது ஆசிட் வீச முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பிவாண்டி நகரை சார்ந்தவர் முகமது இக்பால் சிக்கந்தர் அன்சாரி (வயது 38). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். முகமது இக்பால் கொத்தனாராக பணியாற்றி வந்த பகுதியில், 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். 

இந்த இளம்பெண்ணை இக்பால் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், தனது காதலை ஏற்றுக்கொள்ளக்கூறி பெண்ணுக்கு காதல் தொல்லை அளித்து வந்துள்ளார். இக்பாலின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளாத பெண்மணி, காதல் தொல்லையை கண்டித்து இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த முகமது இக்பால் பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்க திட்டமிட்டு, கடந்த டிச. 22 ஆம் தேதி அவர் கல்லூரிக்கு சென்று வருகையில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். நல்ல வேலையாக பெண்மணி எந்த காயமும் இன்றி தப்பிக்கொண்ட நிலையில், அவர் வந்த இருசக்கர வாகனத்தை முகமது இக்பால் சேதப்படுத்தி இருக்கிறார்.

இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தலைமறைவாக இருந்த முகமது இக்பாலை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Thane #India #Acid attack #one side love #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story