மீண்டும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..!
மீண்டும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு..!
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்ததால், மகாராஷ்டிரா மாநில அரசின் அறிவுறுத்தல்படி, அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்து இருந்தது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்தை பெற்று வரவும் அறிவுறுத்தப்பட்டது.
இன்று முதல் பெற்றோர்களின் ஒப்புதலை பெற்ற மாணவர்கள் நேரடியாக வகுப்புக்கு வந்து கலந்துகொண்டனர். மும்பை நகரில் மாணவர்களின் வருகை குறைந்து இருந்தாலும், மாணவர்களை பள்ளிக்கு நேரடி வகுப்புக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362