×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வளைவில் அதிவேகமாக திரும்பி கரப்பான்பூச்சி போல தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து; 2 பேர் பலி., 55 பேர் படுகாயம்.!

வளைவில் அதிவேகமாக திரும்பி கரப்பான்பூச்சி போல தலைகுப்பற கவிழ்ந்த பேருந்து; 2 பேர் பலி., 55 பேர் படுகாயம்.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், மான்கன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 07:30 மணியவில் நடந்த விபத்தில் இருவர் பரிதாபமாக பலியாகினர். 55 பேர் படுகாயம் அடைந்தனர். 

அம்மாவட்டத்தின் தம்மணி காட் பகுதியில், தனியார் பேருந்து வளைவு பகுதியில் வேகத்துடன் திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. வளைவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், காயமடைந்த 55 நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #maharashtra #மகாராஷ்டிரா #Accident news #Raigad #ராய்கட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story