#Viral Video: இறந்த மனிதம்.. தூங்கிய பயணிகளின் முகத்தில் தண்ணீர் ஊற்றிய காவலர்.. மனதை கணக்க வைக்கும் வீடியோ.!!
அசதியில் உறங்கிய பயணிகளின் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பிய இரயில்வே காவலர்; அதிர்ச்சி சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே ரயில் நிலையத்தின் நடைமேடையில் தொலைதூரப் பயணிகள் தங்களது பயண அசதியின் காரணமாக உறங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், அவர்களின் மீது தனது தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரை ஊற்றி எழுப்பினார்.
இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், மனிதம் செத்துவிட்டதாக பலரும் காவலரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
காவலர் தனது செயல்பாடுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.