×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 வருடமாக தந்தை, சகோதரன் உட்பட 4 பேரால் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்.!

4 வருடமாக தந்தை, சகோதரன் உட்பட 4 பேரால் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்.!

Advertisement

11 வயது சிறுமியை 4 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தை, சகோதரன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஹிஞ்சேவாடி பகுதியில் 11 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் தாய் கணவரை பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அவர் தனது தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், தந்தையின் பராமரிப்பில் இருந்த சிறுமி கடந்த சில நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிறுமியின் பாட்டி, பேத்தியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். 

அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிர்ந்துபோன பாட்டி பேத்தியிடம் விசாரித்தபோது, தந்தை என்ற காமுகன், சகோதரன் மற்றும் தந்தையின் நண்பர்கள் 2 பேர் அத்துமீறிய பயங்கரம் உறுதியானது. 

இதனையடுத்து, சிறுமியின் பாட்டி ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறரை தேடி வருகின்றனர்.

விசாரணையில், சிறுமியின் தந்தை மகளை சீரழித்த நிலையில், அவரின் மகனும் சொந்த தங்கை என்றும் பாராது சிறுமியை கற்பழித்து இருக்கிறான். இந்த தகவலை அறிந்த தந்தையின் 2 நண்பர்களும் சிறுமியை சீரழித்துள்ளனர். இந்த துயரம் கடந்த 4 வருடமாக நடந்து வந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Pune #Hinjewadi #Minor Girl #Abuse #police #Investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story