×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாய்பேச இயலாத 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை.. 21 வயது இளைஞன் கைது..! பதறவைக்கும் பேரதிர்ச்சி சம்பவம்.!

வாய்பேச இயலாத 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம், கொலை.. 21 வயது இளைஞன் கைது..! பதறவைக்கும் பேரதிர்ச்சி சம்பவம்.!

Advertisement

16 வயதுடைய வாய்பேசமுடியாத சிறுவன் 21 வயது இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, கோத்தரூட் பகுதியில் 16 வயதுடைய வாய்பேச இயலாத சிறுவன் வசித்து வருகிறான். இவன் நேற்று முன்தினம் இரவில் மாயமான நிலையில், மகனை தேடியலைந்த பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. சிறுவனின் சடலத்தை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் 21 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Pune #police #Investigation #sexual abuse
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story