×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... வயிற்று வலியால் வெளிவந்த பகீர் தகவல்.. அதிர்ந்துபோன பெற்றோர்.!

13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... வயிற்று வலியால் வெளிவந்த பகீர் தகவல்.. அதிர்ந்துபோன பெற்றோர்.!

Advertisement

13 வயது சிறுமி வீட்டில் தனியே இருந்தபோது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், சிறுமி 5 மாத கர்ப்பிணியான பரிதாபம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அன்தோப் மலைப்பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் 25 வயதாகும் இளைஞர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், 25 வயது நபர் சிறுமி வீட்டில் தனிமையில் இருப்பதை தனக்கு சாதகமாக்கி, கடந்த 7 மாதத்திற்கு முன்னதாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்துபோன சிறுமியும் துயரத்தை வெளியே கூறாமல் இருந்து வந்த நிலையில், காமுகன் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களாகவே சிறுமி வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர் மகளிடம் விசாரித்துள்ளனர். 

அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் காமுகனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து, 25 வயது காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #Antop Hill #Minor Girl #Rape #pregnant #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story