×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாயை கூட விட்டுவைக்கமாட்டீங்களாடா?... ஆணுறுப்பை துண்டித்த சைக்கோ.!

நாயை கூட விட்டுவைக்கமாட்டீங்களாடா?... ஆணுறுப்பை துண்டித்த சைக்கோ.!

Advertisement

உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய கணவன், கள்ளக்காதல் வயப்பட்ட கணவனின் ஆணுறுப்பை பெண்கள் துண்டாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இப்படியான நிலையில் தெருவில் சுற்றித்திரியும் நாயின் ஆணுறுப்பை சைக்கோ ஒருவன் துண்டித்து சென்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வடக்கு அந்தேரி, கபஸ்வாடி பகுதியில் கடந்த டிச. 25 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் தெருநாயொன்று ஓலக்குரலிட்டு கதறியுள்ளது. இதனைக்கேட்டு விழித்த மக்கள் நாயை சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, நாயின் ஆணுறுப்பு வெட்டப்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாய் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #India #dog #Penis
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story