கால்வாய்க்கு பறந்த செல்போன்.. விண்ணுக்கு பாய்ந்த சிறுமி.. குடும்பத்தை உருக்குலைய வைத்த மரணம்.!
கால்வாய்க்கு பறந்த செல்போன்.. விண்ணுக்கு பாய்ந்த சிறுமி.. குடும்பத்தை உருக்குலைய வைத்த மரணம்.!
சகோதரி செல்போனில் பேசுவதை கண்டித்த சகோதரியால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மளாடு, மால்வாணி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அண்டை வீட்டு இளைஞருடன் நண்பராக பழகி வந்துள்ளார். இதனை கவனித்த சிறுமியின் பெற்றோர் இருவரும் காதல் வயப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர்.
மேலும், நீ குறித்த இளைஞருடன் பழக்கூடாது என கண்டிக்கவே, நேற்று முன்தினம் சிறுமி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனைகவனித்த சிறுமியின் மூத்த சகோதரி, சிறுமி இளைஞருடன் பேசிக்கொண்டு இருக்கலாம் என எண்ணி அவரின் செல்போனை பிடுங்கி கால்வாயில் வீசி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி வருத்தத்துடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362