ஐய்யோ.. பச்ச மண்ணுடா அந்த பொண்ணு.. சிதைச்சிடீங்களேடா..! 26 க்கும் மேற்பட்ட இடத்தில் குத்தி இளம்பெண் கொலை, கற்பழிப்பு.!
18 வயது இளம்பெண் காதலன் மற்றும் அவரது நண்பரால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
18 வயது இளம்பெண் காதலன் மற்றும் அவரது நண்பரால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பேரதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குர்லா பகுதியில் இருக்கும் கைவிடப்பட்ட கட்டிடத்தில் இருந்து, 18 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. இவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்த நிலையில், பெண்ணின் உடலை காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், இதுகுறித்து நடத்த விசாரணையில், இரண்டு நாட்களுக்கு பின்னர் 19 வயது இளம்பெண்ணை கொலை செய்ததாக ரெஹ்மான் என்ற 19 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர் பைசல் இம்ரான் என்ற 19 வயது நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், 18 வயது பெண்மணி அவரின் காதலன் மற்றும் காதலனின் நண்பரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் கழுத்தை அறுத்து, தலையை சுத்தியால் அடித்து, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் கிட்டத்தட்ட 26 முறை குத்தி கொலை நடந்துள்ளது. மார்பு மற்றும் வயிற்று பகுதியில் மட்டும் 26 காயங்கள் இருந்துள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியாகியுள்ளது. மேலும், பெண்ணை காதலித்து வந்த ரெஹ்மான், அவரை பலமுறை பாலியல் ரீதியாக உபயோகபடுத்தி இருக்கிறார்.
இதன்பின்னர், திருமணம் செய்துகொள்ளக்கூறி பெண் ரஹ்மானை வற்புறுத்திய நிலையில், ரெஹ்மான் பெண்ணை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து, தனது நண்பருடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். சம்பவ நாளில், பெண்மணி தனது வீட்டில் இருந்து புறப்படுகையில் திருமணம் செய்யும் எண்ணத்துடன் உடையணிந்து, மருதாணி இட்டு புறப்பட்டுள்ளார்.
வீட்டில் பெற்றோர்களிடம் அத்தையின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற பெண்மணி, ரஹ்மானை சந்தித்து இன்றே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி இருக்கிறார். ஏற்கனவே காதலியை கொலை செய்யும் திட்டத்துடன் இருந்து வந்த ரஹ்மான், தனது நண்பர் இம்ரானுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றி இருக்கிறார்.
வெளியே சென்ற மகள் வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் இருந்த நிலையில், இரவு நேரம் கடந்து சென்றும் மகள் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளனர். பின்னர், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இக்கொலை நடந்த நிலையில், வியாழக்கிழமை உள்ளூர் இளைஞர்கள் டிக் டாக் வீடியோ எடுக்க செல்கையில் பெண்ணின் பிரேதத்தை கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பெண்ணின் அடையாளத்தை காணும் வகையில் இல்லாத கொடூரத்துடன் பெண்ணின் உடல் சிதைந்திருந்த நிலையில், காணாமல் போன பெண்களின் பதிவேடுகளை சரிபார்த்து, 18 வயது பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. கொலையை செய்த 2 பேரும், குர்லா பாரத் நகரில் இருந்தபோது கைது செய்யப்பட்டனர். பெண்ணின் அந்தரங்க பாகத்திலும் காயங்கள் இருந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362