வெறும் ₹400 கொடுத்தால் சொகுசு தனி அறை! இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி சீரழித்த இளைஞரின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!!!!
மகாராஷ்டிரா அமராவதி அருகே பரத்வாடாவில் வெளிச்சத்துக்கு வந்த பாலியல் மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஃபே பிரைவேட் வசதி தவறாக பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே உள்ள பரத்வாடாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ள பாலியல் மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அயான் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையிலேயே பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கஃபே வசதியை தவறாக பயன்படுத்திய அதிர்ச்சி
தகவலின்படி, பெண்களை ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி அழைத்துச் சென்ற அயான், வாடகை பிளாட்கள் மட்டுமின்றி நகரில் உள்ள சில கஃபேக்களையும் தனது குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, காதலர்கள் தனிமையில் அமர வழங்கப்படும் ‘பிரைவேட் கம்பார்ட்மென்ட்’ வசதி இதற்காக பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
400 ரூபாய் வசதியில்
சில கஃபேக்களில் வெறும் 400 ரூபாய் கட்டணம் செலுத்தினால் தனியிடம் வழங்கப்படும் நிலையில், அதையே குற்றத்திற்கு பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த Cafe private compartment வசதி, பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணமும் ஆய்வு செய்யப்படுகிறது.
வலை விரிந்த பரப்பில் போலீஸ் விசாரணை
இந்த பாலியல் மோசடி வலை வாடகை வீடுகள், கஃபேக்கள் மட்டுமின்றி அணைப் பகுதிகள் வரை பரவியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, இதில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பதைக் கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சம்பவம் மாநில அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.