×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலுக்காக 26 வயது இளம் கணவன் பலி.. அழுகிய சடலமாக மீட்கப்பட்ட அவலம்.. அதிர்ச்சி சம்பவம்.!

பெண் தனது கணவரை கொலை செய்து புதைத்தார்.

Advertisement

26 வயது கணவரை கள்ளக்காதலுக்காக இளம்பெண் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மாயம்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாதனா மாவட்டத்தில் வசித்து வந்தவர் விபின் குமார் யாதவ் (வயது 26). இவர் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாமியார் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றவர், 4 நாட்கள் கடந்து மார்ச் 27 முதல் மாயமானார். இதுதொடர்பாக விபினின் தந்தை காவல் நிலாயத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

மனைவி சிக்கினார்:

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பல மாதங்களாக முன்னேற்றம் கிடைக்கவில்லை. இறுதியாக விபின் குமாரின் மனைவியின் செல்போன் விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் - சுனில் குஷுவாகா என்ற நபருடன் நீண்ட நேரம் பேசி வந்தது தெரியவந்தது.

கள்ளக்காதல்:

இதனையடுத்து, விபின் குமாரின் மனைவி, சுனில் குஷுவாகா ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, மார்ச் 27ம் தேதி விபின் குமாரை கள்ளக்காதல் ஜோடி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது. பின் உடலை கிணற்றிலும் வீசியுள்ளது. 

கைது:

உடல் கிணற்றில் எப்படியானாலும் மிதந்துவிடும் என்ற பயத்தில், உடலை கிணற்றில் இருந்து எடுத்து வடிகால் அருகில் புதைத்ததும் அம்பலமானது. இவர்களின் வாக்குமூலத்துக்குப்பின் விபினின் அழுகிய சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் இப்படியா? வாழ்நாளை நரகமாக்கிய கணவனை எமலோகத்துக்கு அனுப்பிய மனைவி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#illegal affair #Husband murder #Crime news #Madhya pradesh #Satna News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story