×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசிரியை தண்ணீர் கேனில் சிறுநீரை நிரப்பி வைத்த விஷமிகள்; தாகத்தில் தவித்த ஆசிரியைக்கு பேரதிர்ச்சி.!

ஆசிரியை தண்ணீர் கேனில் சிறுநீரை நிரப்பி வைத்த விஷமிகள்; தாகத்தில் தவித்த ஆசிரியைக்கு பேரதிர்ச்சி.!

Advertisement

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி சொல்லப்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் 35 வயதுடைய ஆசிரியை பணியாற்றி வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவருக்கு தாகம் எடுத்துள்ளது. 

இதனையடுத்து, வகுப்பறையில் இருந்த குடிநீர் கேனில் இருந்த நீரை எடுத்து அவர் குடித்தபோது, ஒருவிதமான வித்தியாசம் தென்பட்டுள்ளது. 

உடனடியாக அதனை எடுத்துக்கொண்டு சக ஆசிரியர்களிடம் கொடுக்கையில், அதில் சிறுநீர் இருந்தது உறுதியானது. 

இதனால் அதிருப்தியடைந்த ஆசிரியை செய்வதறியாது தவித்த நிலையில், தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்றுள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #India #teacher #urine
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story