நடுரோட்டில் பொண்டாட்டி அடிச்சா தப்பு இல்ல.... ஆனால் புருஷன் அடுச்சா தப்பா? அடி தாங்க முடியாமல் கதறி அழுத கணவன்! அதிர்ச்சி வீடியோ..!!!
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் RTO அலுவலகம் முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறு நடுரோட்டில் சண்டையாக மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள RTO அலுவலகம் முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை காரணமாக ஆக்ராவிலிருந்து வந்திருந்த தம்பதியர் நடுரோட்டிலேயே கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சிறிய குழந்தை முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடுரோட்டில் வெடித்த குடும்பத் தகராறு
தகவலின்படி, தேவ சௌராசியா மற்றும் அவரது மனைவி சுமேன் சௌராசியா ஆகியோர் வேலை தொடர்பாக சத்தர்பூர் வந்திருந்தனர். அப்போது RTO அலுவலகம் அருகே இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுமேன், கணவரின் கைகளை பிடித்தபடி நடுரோட்டிலேயே சரமாரியாக கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நீண்டுள்ளது. அந்த நேரத்தில் அவர்களது குழந்தையும் அருகிலேயே இருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகளை தாங்க முடியாமல் எதிர்த்து பேசிய பெண்! நிமிடத்தில் அரங்கேறிய அட்டூழியம்..... அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!!
வீடியோ எடுத்த பொதுமக்கள்
சண்டை நடந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தாலும், யாரும் உடனடியாக தலையிட்டு சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக பலர் தங்களது மொபைல் போன்களில் காட்சிகளை பதிவு செய்தனர். பின்னர் அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் வீடியோ ஆக பரவத் தொடங்கின.
அப்போது அந்த நபர், “நான் திருப்பி ஏதாவது செய்திருந்தால், எல்லோரும் என்னையே குற்றவாளி என்று சொல்லியிருப்பார்கள்” என்று அங்கிருந்தவர்களிடம் வேதனையுடன் பேசியதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
இந்த மோதலால் அந்த பகுதியில் சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுவரை இந்த RTO அலுவலகம் சம்பவம் தொடர்பாக எந்த தரப்பிலிருந்தும் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.