வீட்டு வேலை செய்த தாய்! பாட்டியின் அந்த ஒரு ஆசையால் 20 நாள் பச்சிளம் குழந்தை பலி.... நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.!!!
மத்தியப் பிரதேசத்தில் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தையை கழுத்து நெரித்துக் கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
மத்தியப் பிரதேசத்தின் டிகாம்கர் மாவட்டத்தில் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இயல்பான மரணம் எனக் கருதப்பட்ட நிலையில், உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகு குழந்தையின் பாட்டியே இந்தக் கொலையைச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தையை அழைத்துச் சென்ற பாட்டி
டிகாம்கர் மாவட்டத்தின் பன்னே புஜுர்க் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, குழந்தையை கவனித்துக் கொள்வதாகக் கூறிய பாட்டி, பச்சிளம் குழந்தையை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் குழந்தை அசைவின்றி இருந்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சேலையில் ஊஞ்சல் விளையாடிய 12 வயது சிறுவன்! நொடிப்பொழுத்தில் நடந்த விபரீதம்! பெரும் சோகம்!
உடற்கூறாய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஆரம்பத்தில் இது இயல்பான உயிரிழப்பு என சந்தேகமின்றி கருதப்பட்டது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கையில் குழந்தையின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது.
ஆண் பேரன் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
விசாரணையில், குடும்பத்தின் மூத்த பெண்ணான பாட்டிக்கு ஆண் பேரன் வேண்டும் என்ற தீவிர விருப்பம் இருந்ததாகவும், பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட ஏமாற்றமே இந்தக் கொலையின் பின்னணியாக இருந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட பாட்டியை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த தாய்! வீடு திரும்பியபோது 4 வயது மகளுக்கு நடந்த கொடூரம்....தனியாக தவித்த பிஞ்சு குழந்தை !!!