அடக்கடவுளே... இத செய்ய எப்படித்தான் மனசு வந்துச்சோ..! அதிகாலையில் அடுக்கடுக்காக மனைவி, 3 குழந்தைகளை கோடரியால் வெட்டி... ரத்தம் சொட்ட சொட்ட வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த கணவன்! நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!
மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கோடரியால் கொன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை நபர் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை நடந்த கொடூர சம்பவத்துக்குப் பிறகு, இரத்தம் சொட்ட சொட்ட கோடரியுடன் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
அதிகாலை நடந்த கொடூர கொலை
தமோ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். த்வாரகா படேல் என்பவர் தனது மனைவி கேமா பாய் (27) மற்றும் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மீது கோடரியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 1, 4 மற்றும் 7 வயதுடைய மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு த்வாரகா படேல் வீட்டின் வாசலில் கோடரியுடன் அமர்ந்திருந்ததாகவும், தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீசார் அவரை உடனடியாக கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டாக நீடித்த குடும்பத் தகராறு
கணவன், மனைவி இடையே கடந்த ஓராண்டாக தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலையிலும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த த்வாரகா படேல், வீட்டில் இருந்த கோடரியை எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை
கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடும்பத் தகராறு தொடர்பாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நீங்களே ஒன்னு ஒன்னு சொல்லாதீங்க..! என் தம்பி ஐபோனுக்காக சாகல....! மலை சோகத்தின் பின்னணியில் மனம் உடைந்து உண்மையை உடைத்த சகோதரி....!!!