×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மனைவியை சிறுநீர் குடிக்க வற்புறுத்திய பயங்கரம்.. கணவனின் கொடூர செயல்‌‌..!

பாலியல் ரீதியாக துன்புறுத்தி, மனைவியை சிறுநீர் குடிக்க வற்புறுத்திய பயங்கரம்.. கணவனின் கொடூர செயல்‌‌..!

Advertisement

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள செஹோர் பகுதியைச் சார்ந்த பெண்மணி, தனது கணவருக்கு எதிராக பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரில், "எனது கணவருக்கும் - எனக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்தது. 

திருமணத்தின்போது நல்ல குணம் உள்ளவராக இருந்தவர், திருமணத்திற்கு பின் என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். 

கணவர் என முதலில் நான் ஒத்துழைப்பு கொடுத்த நிலையில், பின் நாட்களில் அவரின் செயல்பாடு கடுமையாக மாறியது. 

 

மேலும், உடல் ரீதியாக பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி கொடுமை செய்தார். ஒருமுறை மண்ணெண்ணெய் ஊற்றி நான் தற்கொலை செய்யவும் முயற்சித்தேன்.

என்னை காப்பாற்றி சமாதானப்படுத்தி மீண்டும் அவரின் தொல்லைகளை தொடர்ந்து வருகிறார். 

சிறுநீரை குடிக்க கட்டாயப்படுத்தி தாக்கி குடிக்க வைத்தார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கணவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #Madhya pradesh #மத்திய பிரதேசம் #Urine torture #Husband torture wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story