×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.!

Advertisement

பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கமடைய, மொத்தமாக 54 மாணவ - மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தின்டோரி நகரில் அரசுமேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று பள்ளியின் சத்துணவை 200 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் சாப்பிட்ட நிலையில், அதில் 54 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, ஆசிரியர்கள் அவசர ஊர்தியின் உதவியுடன் மாணாக்கர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக உணவுப்பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #Govt school #India #school students
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story