மின்கசிவால் பயங்கரம்... வீட்டில் தீப்பிடித்து உறங்கிக்கொண்டு இருந்த 7 பேர் உடல் கருகி மரணம்.!
மின்கசிவால் பயங்கரம்... வீட்டில் தீப்பிடித்து உறங்கிக்கொண்டு இருந்த 7 பேர் உடல் கருகி மரணம்.!
மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில், 7 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டம் ஸ்வார்ன் பாக் காலணியில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 3:10 மணியளவில் குடியிருப்புவாசிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அடித்தளத்தில் உள்ள மின்சார விநியோக அமைப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் அடித்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வாகனங்கள் மூலமாக தீ பரவி கட்டிடம் முழுவதும் மளமளவென எரியத் தொடங்கியுள்ளது. பின் இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும், இது குறித்து இந்தூர் காவல்துறை ஆணையர் ஹரிநாராயணா சாரி கூறுகையில், இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் 9 பேர் மீட்கப்பட்ட நிலையில், அதில் 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த தீ விபத்துக்கு என்ன காரணம்? என விசாரித்த நிலையில், இரண்டு மாடி கட்டிடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலையில், மின் கசிவு ஏற்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது.
இதனால் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவாமல், அலட்சியமாக இருந்த கட்டிட உரிமையாளர் அன்சார் படேலின் மீது காவல்துறையினர் 304A ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362